சென்னை: நான் படிக்கும் போது ஊருக்கு ஒரு பி.ஏ. ஆனால், இப்போது நாய் கூட பி.ஏ படிக்குது என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியது சர்ச்சையாக மாறியுள்ளது.
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மாணவரணி சார்பில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இன்று போராட்டம் நடைபெற்றது. சென்னையில் வள்ளுவர் கோட்டம் பகுதியில் நடைபெற்ற போராட்டத்திற்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமை தாங்கினார். இந்த நீட் போராட்டத்தின் போது அவர் பேசிய சில கருத்துக்கள் தற்போது பேசுபொருளாக மாறிவிட்டது.
அவர் பேசுகையில், கம்யூனில் ஜீவோ எனும் அரசு உத்தரவு மூலமாக தான் இங்கு நம்மில் பல பேர் டாக்டர்கள், வக்கீல்கள் என பல்வேறு பட்டங்கள் பெற்றோம் அதனை மறந்துவிட கூடாது. ஏதோ குலப்பெருமையால், கோத்திர பெருமையால் யாரு பட்டம் பெறவில்லை. ஆனால் இங்கு அதனை பலர் மறந்துவிட்டனர். இது திரவிட இயக்கங்கள் போட்ட பிச்சை. நான் வெளிப்படையாக பேசுகிறேன். நான் எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடிய தைரியம் உள்ளவன் நான்.
நான் பி.ஏ பட்டம் பெற்றவுடனே ஒரு பெயிண்டர் ஆள்கிட்ட கொடுத்து ” ஆர்.எஸ்.பாரதி பி.ஏ” என பேர் எழுதினேன். அப்போதெல்லாம் ஊருக்கு ஒரே ஒரு பி.ஏதான் இருப்பார்கள். இப்போது, நாய் கூட பி.ஏ பட்டம் வாங்குகிறது. இப்பொழுது யார் வீட்டிலாவது பி.இ (B.E), பி.ஏ (B.A) என போர்டு தொங்குகிறதா? யார் இந்த வளர்ச்சிக்கு காரணம்.? இந்த வளர்ச்சியை அழிக்க நினைப்பதற்கு தான் நீட் தேர்வு வந்திருக்கிறது என ஆவேசமாக பேசினார் திமுக அமைப்பு செயலலாளர் ஆர்.எஸ்.பாரதி.
துபாய் : இன்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் 4-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், நியூஸிலாந்து மகளிர் அணியும்…
சென்னை : மாநில அளவில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் இன்று தொடக்கப்பட்டன. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இந்த…
துபாய் : நடைபெற்று வரும் மகளிருக்கான டி20 உலகக்கோப்பை தொடரில் 3-வது போட்டியானது இன்று துபையில் நடைபெற்றது. இந்த போட்டியில்…
சென்னை : மெட்டா நிறுவனம் அடிக்கடி வாட்அப்பில் பயனர்களைக் கவர்ந்த இழுக்கும் வகையில், தொடர்ச்சியாக நல்ல அப்டேட்டுகளை கொண்டு வருகிறது.…
சென்னை - சரஸ்வதி பூஜை கொண்டாடுவதன் நோக்கம் மற்றும் வித்யாரம்பம் செய்யும் முறையை பற்றி இந்த ஆன்மீக குறிப்பில் காணலாம் …
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.…