உதயநிதி ஸ்டாலினுக்கு பதவி கொடுப்பது பற்றி திமுக தலைவர் ஸ்டாலின் முடிவு செய்வார் என்று திமுகவின் முன்னால் அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
திமுகவை பொருத்தவரை கருணாநிதிக்கு பின்னர் அவரது மகன் மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக பதவி வகித்து வருகிறார்.அவருக்கு அடுத்து திமுக தலைமை பதவி யாருக்கு கிடைக்கும் என்று கேள்விக்கு முதலில் பரிந்துரையாவது ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் தான்.அந்த வகையில் சமீபத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக இளைஞரணி செயலாளர் பதவி வழங்கப்படும் என்ற தகவல் அதிகம் வெளியாகி வருகிறது.
ஆனால் தற்போது திமுகவின் முன்னால் அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன் திமுக இளைஞரணி செயலாளர் பதவியில் உள்ளார்.இந்நிலையில் திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் வெள்ளகோவில் சாமிநாதன் கலந்துகொண்டார்.இதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், திமுக இளைஞரணி செயலாளர் பதவியை ராஜினாமா செய்யவில்லை.திமுக இளைஞரணி செயலர் பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் அனுப்பப்பட்டதாக பரவிய தகவலில் உண்மையில்லை.உதயநிதி ஸ்டாலினுக்கு பதவி கொடுப்பது பற்றி திமுக தலைவர் ஸ்டாலின் முடிவு செய்வார் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : இரண்டு நாள் அரசு முறை பயணமாக நெல்லை சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று 2வது நாளாக கள…
சென்னன: நடிகர் அஜித் நடிப்பில் கடசியாக வெளியான துணிவு படத்துக்கு பின், கடந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு மிக பிரம்மாண்ட…
டெல்லி : முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் கடந்த 2015ம் ஆண்டு அக்டோபரில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு…
நெல்லை : இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நெல்லை மாவட்டத்திற்கு சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், அங்கு களஆய்வு மேற்கொண்டு பல்வேறு அரசு…
டெல்லி : நாட்டின் முன்னணி உணவு விநியோக நிறுவனமான ஜொமாட்டோ தனது பெயரை மாற்ற முடிவு செய்துள்ளது. பெயரை மாற்றுவதற்கான…
சென்னை : நெல்லை கங்கைகொண்டானில் டாடா குழும நிறுவனத்தின் சூரிய மின்கல உற்பத்தி ஆலையை திறந்து வைப்பதற்காக இன்று முதலமைச்சர்…