திமுக நிர்வாகிகளுக்கு திமுக தான் இனி உங்கள் சாதி. தொண்டர்கள் தான் சாதிசனம். இனி வரும் காலம் சோதனை காலம் என புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு முரோசொலி பத்திரிகை வாயிலாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திமுக உட்கட்சி தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மாவட்ட, பேரூராட்சி, ஊராட்சி, ஒன்றிய பகுதிகளுக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு விட்டனர். தலைவர் , பொதுச்செயலாளர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மட்டும் வரும் கழக பொதுக்கூட்டத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
இதற்கிடையில், திமுகவின் பத்திரிகையான முரசொலியில் புதிய நிர்வாகிகளுக்கு சில அறிவுரைகள் விடப்பட்டு உள்ளது. அதில், ‘ திமுக என்பது தனிமனித செல்வாக்கை வைத்து வளர்ந்த இயக்கமல்ல. கொள்கை தான் திமுகவின் வலிமை. திமுக நிர்வாகிகளுக்கு இனி சாதிய அடையாளம் கிடையாது. திமுக தான் இனி உங்கள் சாதி. திமுக தொண்டர்கள் தான் உங்கள் சாதிசனம். ‘ என்றும்,
‘ இடுபொடிந்த தோல்விகள் கண்டபோதும், திமுக மிடுக்கோடு எழுந்து நின்றுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கு வரும் காலம் சோதனை மிகுந்தது. கடுமையாக பணியாற்ற வேண்டும்.’ எனவும் முரசொலியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…