திமுக பொதுக்கூட்டத்தில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றவில்லை எனக்கூறி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலை சந்திக்க திமுக தயாராகி வருகிறது. இந்தநிலையில், திமுக சார்பில் நாளை மறுநாள் வேட்பாளர் பட்டியலும், வருகின்ற 11-ம் தேதி தேர்தல் அறிக்கை வெளியிடப்படுகிறது. திமுக சார்பில் 11-வது மாநில மாநாடு நேற்று திருச்சியில் நடந்தது.
மு .க ஸ்டாலின் தனது பிறந்த நாளான மார்ச் 1-ம் தேதி இதை அறிவித்தார். இக்கூட்டம் “தமிழகத்தில் விடியலுக்கான முழக்கம்” என்ற தலைப்பில் மாநாடு நடத்தப்படும் என அறிவித்தார். அதன்படி திருச்சி -சென்னை பைபாஸ் சாலையில் உள்ள சிறுகனுரில் சுமார் 750 ஏக்கரில் பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் 5 லட்சத்திற்கு மேற்பட்டோர்அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டு இருந்தது. பல லட்சம் தொண்டர்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், நேற்று பொதுக்கூட்டம் நடத்திய திமுகவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திமுக பொதுக்கூட்டத்தில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றவில்லை எனக்கூறி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மும்பை : அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் இருவருக்கும் இடையே நடந்த…
டெல்லி : பஹல்காம் விவகாரத்தில் இந்திய ராணுவம் பாகிஸ்தானை கூறிவைத்து தாக்குதல் நடத்தியது போருக்கு வழிவகுத்தது. இரண்டு நாடுகளுக்கும் இடையே நடந்த…
மதுரை : தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில், தேர்தலில் பங்கேற்கும் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கான வேளைகளில்…
கேன்டர்பரி : இந்திய கிரிக்கெட் வீரர் கருண் நாயர் இளம் கிரிக்கெட் வீரர்கள் கிடைத்த வாய்ப்புகள் எப்படி பயன்படுத்தவேண்டும் என்கிற அளவுக்கு…
சென்னை : பாமக நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு பெரிய அளவில் பேசுபொருளாக…
சென்னை : தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் ராஜேஷ், தனது 75-ஆவது வயதில் சென்னையில் மாரடைப்பால் காலமானார். இவருடைய மறைவு சினிமா…