திமுக பொதுக்கூட்டம்.. காவல்துறை வழக்குப்பதிவு..!

Default Image

திமுக பொதுக்கூட்டத்தில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றவில்லை எனக்கூறி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலை சந்திக்க திமுக தயாராகி வருகிறது. இந்தநிலையில், திமுக சார்பில் நாளை மறுநாள் வேட்பாளர் பட்டியலும், வருகின்ற 11-ம் தேதி தேர்தல் அறிக்கை வெளியிடப்படுகிறது. திமுக சார்பில் 11-வது மாநில மாநாடு நேற்று திருச்சியில் நடந்தது.

மு .க ஸ்டாலின் தனது பிறந்த நாளான மார்ச் 1-ம் தேதி இதை அறிவித்தார். இக்கூட்டம் “தமிழகத்தில் விடியலுக்கான முழக்கம்” என்ற தலைப்பில் மாநாடு நடத்தப்படும் என அறிவித்தார். அதன்படி திருச்சி -சென்னை பைபாஸ் சாலையில் உள்ள சிறுகனுரில் சுமார் 750 ஏக்கரில் பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் 5 லட்சத்திற்கு மேற்பட்டோர்அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டு இருந்தது. பல லட்சம் தொண்டர்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், நேற்று பொதுக்கூட்டம் நடத்திய திமுகவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திமுக பொதுக்கூட்டத்தில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றவில்லை எனக்கூறி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Ilayaraja Biopic
mp sudha anbumani
Jayalalithaa and pm modi
nzvsban
vidaamuyarchi ott release date
kaliyammal tvk