சாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சி அதிமுக என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கோவை பேரூரில் 123 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைத்த பின் பேசிய முதல்வர் பழனிசாமி, தமிழ் நாட்டில் குழந்தை இறப்பு விகிதம் 16 லிருந்து 15 ஆக குறைந்துள்ளது என கூறியுள்ளார். பேரு காலத்தில் தாய்மார்களின் இறப்பு விகிதம் பொறுத்த வரையில் 2030ல் அடைய வேண்டிய இலக்கை இப்போதே அடைந்துவிட்டோம். அந்த அளவுக்கு சுகாதாரத்துறை வெற்றிகரமாக, சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றும் பெருமிதம் கொண்டார்.
இந்தியாவிலேயே அதிகமாக மருத்துவமனையில் பிரசவம் பெறுவதும் தமிழ்நாட்டில் தான் என்றும் அதுபோல் ஏழை, எளியோருக்கு இலவச சிகிச்சை வழங்கக்கூடிய வகையில் 2000 அம்மா மினி க்ளினிக் ஒரே நேரத்தில் திறக்கப்பட்ட அரசு அதிமுக அரசு தான் எனவும் குறிப்பிட்டுள்ளார். நீட் தேர்வின் மூலமாக அரசு பள்ளியில் படிக்கின்ற மாணவர்கள் அதிக அளவிலே தேர்ச்சி பெற முடியாத சூழலில், அதிமுக அரசு 7.5 % உள் ஒதுக்கீடை கொண்டுவந்து 435 பேர் மருத்துவ படிப்பை படிக்கச் வாய்ப்பை உருவாக்கியுள்ளோம்.
தொடந்து பேசிய முதல்வர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் கொண்டுவந்த திட்டங்களை தற்போது நடைமுறைப்படுத்தி வருகிறோம் என்று கூறியுள்ளார். சாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சி அதிமுக, நமக்கு சாதி, மதம் பேதமில்லை. காற்றில் பறக்கவிடும் வாக்குறுதிகளை கொடுப்பது திமுக என்றும் முதல்வர் பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…
சென்னை : நேஷனல் கவுன்சில் ஆஃப் எஜுகேஷனல் ரிசர்ச் அண்ட் ட்ரெய்னிங் (NCERT) அமைப்பு, இந்தியாவில் பள்ளிக் கல்விக்கான பாடநூல்களை…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…
சென்னை : மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து துரை வைகோ விலகுவதாக அறிவித்துள்ளார். அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக உள்ள மல்லை…