திமுக முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டிருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் முதன்முதலில் ஒரு புகார் ஒன்றை கூறினார். இந்த புகாரையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக பாரதிய ஜனதா கட்சி மாநில செயலாளர் சீனிவாசன் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளித்தார். மேலும் இந்த விவகாரம் பெரும் பூதாகரமாக தமிழகத்தில் வெடித்தது. மேலும், இதுதொடர்பான விசாரணை சென்னையில் நடைபெற்றது. இதில் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக அந்த கட்சியின் அமைப்புச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினரான ஆர்.எஸ்.பாரதி நேரில் ஆஜராகி அவரது தரப்பு ஆதாரங்களை சமர்ப்பித்தார். இதுபோலவே பாரதிய ஜனதா கட்சி சார்பிலும் மாநில செயலாளர் சீனிவாசன் ஆஜரானார். பலரும் மறந்த இந்த விவகாரத்தில் தற்போது மீண்டும் இவ்விவகாரம் தலைதூக்கியுள்ளது.இந்நிலையில் இந்த, பஞ்சமி நிலத்தில் முரசொலி அலுவலகம் கட்டப்பட்டிருப்பதாக எழுந்த புகார் தொடர்பாக, திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த ஆணையம் அனுப்பிய நோட்டீஸில் இந்த பஞ்சமி நில விவகார புகார் தொடர்பாக வரும் ஜனவரி மாதம் 7ஆம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மறந்த இந்த விவகாரம் தற்போது மீண்டும் தலைதூக்கியுள்ளது.
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…