நாளை திமுக எம்.பி.க்கள் கூட்டம்

Default Image

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை (பிப்ரவரி 29-ம் தேதி) திமுக எம்.பி.க்கள் கூட்டம் ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. 

இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிடப்பட்ட அறிவிப்பில்,திமுக கழக தலைவர் முக.ஸ்டாலின் தலைமையில் கழக நாடாளுமன்ற கூட்டம் பிப்ரவரி 29-ம் தேதி சனிக்கிழமை அன்று காலை 10 மணிக்கு சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும். அப்போது கழக மக்களவை மற்றும் மாநிலவை உறுப்பினர்களை தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என  அறிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்