நம் நாட்டில் கோலம் போடுவது கூட தேசவிரோதம் தான்! டிவிட்டரில் விமர்சித்த எம்பி கனிமொழி!

Published by
மணிகண்டன்
  • குடியுரிமை திருத்த சட்டம், குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் பெண்கள் கோலம் போட்டு போராட்டம் செய்தனர்.
  • இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 7 பெண்கள் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர். இதுகுறித்து திமுக எம்பி கனிமொழி டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம், குடிமக்கள் பதிவேடு சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த போராட்டம் தமிழகத்திலும் ஆங்காங்கே தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சென்னையில் சில பெண்கள் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும், குடிமக்கள் பதிவேடு சட்டத்திற்கு எதிராகவும் தனது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் சாலைகளில் கோலம் போட்டு அந்த கோலத்தில் NO CAA, NO NRC என்று அவர்கள் எழுதி தங்களது எதிர்ப்பை தெரிவித்து போராட்டம் செய்தனர்.

இதனை அடுத்து கோலம் போட்டு போராட்டத்தில் ஈடுபட்ட  7 பெண்களை போலீசார் கைது செய்தனர். பின்னர், சற்று நேரத்தில் அவர்களை விடுவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து திமுக எம்.பி கனிமொழி, தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் குறிப்பிட்டுள்ள பதிவில், நம் நாட்டில் வாசல் கூட்டுவது, கோலம் போடுவது போன்றவை தேசவிரோதம் என்பது தற்போது தெளிவாகியுள்ளது. பெற்ற சுதந்திரத்தை பேணிக் காத்து, அடிப்படை உரிமைகளை அனைவருக்கும் உறுதி செய்து தங்கள் எஜமானின் மனம் குளிர செயல்பட்டு வரும் எடப்பாடி அரசுக்கு பாராட்டுக்கள்.’ எனவும் பதிவிட்டுள்ளார்.

 

 

 

Recent Posts

39 தொகுதிகள் 31ஆக மாறும்! தமிழ்நாட்டின் குரல்வளை நசுக்கப்படும்! மு.க.ஸ்டாலின் அழைப்பு!

சென்னை : வரும் மார்ச் 5ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற உள்ளது.…

9 minutes ago

தவெக இரண்டாம் ஆண்டு தொடக்க விழா… தீயாக வேலை செய்யும் ஆனந்த் – ஆதவ் அர்ஜுனா.!

சென்னை : தவெக இரண்டாம் ஆண்டு தொடக்கவிழா நாளை புதன்கிழமை 26 பிப்ரவரி மகாபலிபுரம் 5 நடசத்திர விடுதி உள்…

52 minutes ago

அம்பேத்கரை விட மோடி பெரியவரா? கொந்தளித்த அதிஷி! சஸ்பெண்ட் செய்த சபாநாயகர்!

டெல்லி : நடந்து முடிந்த டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் 48 இடங்களை கைப்பற்றி  27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக ஆட்சியை…

1 hour ago

கலைஞர் நூற்றாண்டு அகாடமி : பாக்ஸிங்-ஐ கண்டு கழித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை :  சென்னை கோபாலபுரம் மாநகராட்சி விளையாட்டு திடலில் அமைக்கப்பட்டுள்ள குத்துச்சண்டை அகாடமியை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின். இளைஞர்…

1 hour ago

இது என்னடா புது புரளி..? 22 மந்திரவாதியை வச்சி இந்தியா, பாகிஸ்தானை ஜெயிச்சிடுச்சாம்!?

துபாய் : இந்த வருட சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தி வருகிறது. ஆனால், துரதிஷ்டவசமாக பாகிஸ்தான்…

2 hours ago

பதில் சொல்லுங்க., இல்லைனா வேலையை விட்டு போங்க.., அரசு ஊழியர்களிடம் ‘கறார்’ காட்டும் எலான் மஸ்க்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று எலான் மஸ்கின் தீவிர…

3 hours ago