திமுக எம்.பி. கனிமொழி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதற்கு கனிமொழி, நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், நேற்று மாலை 7 மணி முதல் தேர்தல் பிரச்சாரங்கள் முடிவடைந்தது. இதற்கிடையில், தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், பிரச்சாரத்தில் ஈடுபடும் வேட்பாளர்கள் உட்பட பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அந்தவகையில், திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தீவிரம் பிரச்சாரம் மேற்கொண்டு வந்த திமுக எம்.பி.யும், மகளிரணி செயலாளருமான கனிமொழிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட கனிமொழியின் உடல்நிலை குறித்து பலரும் விசாரித்து வரும் நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா தொற்றிலிருந்து விரைவில் குணமடைய வாழ்த்துக்கள் என தெரிவித்தார். இதற்கு பதிலாக கனிமொழி, உங்களின் அக்கறை மற்றும் வாழ்த்துக்களுக்கு நன்றி என பதிலுக்கு தெரிவித்துள்ளார்.
லியோனிங் : ஏப்ரல் 29 அன்று, சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள லியோயாங் நகரின் பைடா மாவட்டத்தில் (Baita District)…
காஷ்மீர் : மாநிலம் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…
ஜெய்ப்பூர் : நேற்றிலிருந்து இணையத்தளத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும் ஒரு பெயர் என்றால் ராஜஸ்தான் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்சி…
சென்னை : கடந்த ஏப்ரல் 26 (திங்கள்) அன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன்…
மதுரை : மதுரை கே.கே.நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மழலையர் பள்ளியில் ஆருத்ரா எனும் 4 வயது குழந்தை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.…