போராட்டம் நடத்த பொள்ளாச்சி நோக்கி சென்ற திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில், குற்றவாளிகளை கைது செய்ய கோரி இன்று போராட்டம் அறிவித்து இருந்தது திமுக.ஆகவே போராட்டம் நடத்த பொள்ளாச்சி நோக்கி சென்ற திமுக எம்.பி. கனிமொழி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். ஈச்சனாரி அருகே கனிமொழி சென்ற வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள் .தடுத்து நிறுத்தப்பட்ட இடத்தில் கனிமொழி மற்றும் திமுகவினர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து திமுக எம்.பி. கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,பொள்ளாச்சி பாலியல் வன்முறை கொடூரத்தை கண்டித்து இன்று திமுக சார்பாக நடைபெற இருக்கும் போராட்டத்திற்கு வரும் பெண்களையும் கழக தொண்டர்களையும் ஆங்காங்கே போலீசார் வழிமறித்து திருப்பி அனுப்புவதாக தகவல் வந்து கொண்டே இருக்கிறது.எங்கள் வாகனங்களையும் நிறுத்தினார்கள். போலீசாரின் இச்செயலை கண்டித்து சாலையில் அமர்ந்து போராட்டம் செய்ததாக தெரிவித்துள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…