எம்.பி., கதிர் ஆனந்தை மிரட்டியது யார்?… விசாரித்து அறிக்கை அளிக்க உத்தரவு….

Published by
Kaliraj

உளவுத் துறையினர், தில்லியில் தன் அறையில் புகுந்து மிரட்டியதாக மக்களவை  சபாநாயகரிடம் புகார் அளித்திருந்தார், இதுகுறித்து விசாரிக்க சபாநாயகர் உத்தரவு.

வேலுார் தொகுதி, திராவிட முன்னேற்ற கழக – நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்தை உளவுத்துறையினர் அவரது அறையில் புகுந்து மிரட்டியது தொடர்பாக சபாநாயகர் ஓம் பிர்லா அவர்கள், ‘இது மிகவும் சீரியஸான விஷயம்… உடனடியாக இதை தில்லி காவல்துறையினர் விசாரித்து அறிக்கை அளிக்க வேண்டும்’ என, தில்லி காவல்துறையினருக்கு உத்தர விட்டார். இது தொடர்பாக டில்லி காவல்துறையினர், தமிழ்நாடு இல்லத்திலிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், கதிர் ஆனந்தின் உதவியாளர், சிலரை, தமிழக இல்ல வாயிலில் இருந்து அழைத்துச் செல்வது போன்ற காட்சிகள் பதிவாகியிருந்தது. தமிழ்நாடு இல்ல அதிகாரிகளிடமும் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.’தமிழ்நாடு இல்லத்தில் யாரும் தன்னிச்சையாக நுழைந்துவிட முடியாது. வாயிலில் பாதுகாப்பு சோதனை நடக்கும். இது மட்டுமல்லாமல், ஒவ்வொரு மாடியிலும் சோதனை நடத்தப்படும்’ என, பாதுகாவலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் விசாரணை விபரங்களை சபாநாயகருக்கு காவல்துறையினர் சமர்ப்பித்துவிட்டனர். உளவுத் துறையும், ‘எங்களுக்கும், கதிர் ஆனந்த் புகாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ என, சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளதாம். மக்களவை  தேர்தலின் போது, கதிர் ஆனந்த் பணப்பட்டுவாடா செய்ததாக குற்றம் சாட்டப்பட்டதால் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு, பின் நடந்தது. இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது.இந்த சம்பவத்துக்கும், கதிர் ஆனந்த் புகாருக்கும் சம்பந்தம் இருக்குமா என, தில்லி காவல்துறையினர் சந்தேகப்படுகின்றனர். மற்றொரு பக்கம், இந்த விவகாரம் தொடர்பாக புகார் அளிக்கப்போவதாக, கட்சியின் மூத்த எம்.பி.,க்களிடம், கதிர் ஆனந்த் கலந்தாலோசிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

Published by
Kaliraj
Tags: #DMK#MPISSUE

Recent Posts

நடிகை வழக்கில் தொண்டர்கள் திரள் நடுவில் காவல் நிலையத்தில் சீமான் ஆஜர்! 

நடிகை வழக்கில் தொண்டர்கள் திரள் நடுவில் காவல் நிலையத்தில் சீமான் ஆஜர்!

சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…

7 hours ago

சிறுமி மீது தவறு? சர்ச்சை பேச்சு எதிரொலி.! மயிலாடுதுறை ஆட்சியர் அதிரடி மாற்றம்!

மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…

9 hours ago

தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…

சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…

11 hours ago

AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!

லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…

12 hours ago

“கைதுக்கு நான் பயப்படவில்லை. இப்போதே விசாரணைக்கு தயார்” சீமான் பரபரப்பு பேட்டி!

சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…

12 hours ago

“விருப்பமில்லாமல் செய்தால் தான் அது பாலியல் வன்கொடுமை” சீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு!

தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…

15 hours ago