ஒரு மாத சம்பளத்தை வழங்கும் திமுக எம்.பி மற்றும் எம்.எல்.ஏ – முக ஸ்டாலின் அறிவிப்பு.!

Default Image

கொரோனா வைரஸ் பரவலால் பாதிக்கப்பட்டுள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் திமுக எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் தங்களது ஒரு மாத சம்பளத்தை வழங்குவார்கள் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்று பரவலால் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உதவிடும் வகையில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் தங்களது ஒரு மாத சம்பளத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்குவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழக அரசும் உடனே போதிய நிதி ஒதுக்கீடு செய்து அமைப்பு சாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றும் தமிழகத்தில் உள்ள தொழிலதிபர்களும் இந்த முயற்சியில் தாங்களும் பங்கெடுத்து  கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்