திமுக எம்எல்ஏ மறைவு ! ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரங்கல் .!

Default Image

குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் காத்தவராயன் மறைவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரங்கல் தெரிவித்துள்ளார் . காத்தவராயன் மறைவு குடியாத்தம் மக்களுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று  ஆளுநர் பன்வாரிலால் புரோகித்  தெரிவித்துள்ளார்.

வேலூர் குடியாத்தம் தொகுதி திமுக எம்எல்ஏ காத்தவராயன் உடல்நலக்குறைவால் காலமானார். இவர் கடந்த ஆண்டு மே மாதம் தமிழகத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் குடியாத்தம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏக்கள் தேர்வானார். இவர் சில மாதங்களுக்கு முன்பாக இதய அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

இதனால் உடல்நலக்குறைவால் இருந்து வந்த காத்தவராயன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார்.  நேற்று திருவொற்றியூர் திமுக எம்எல்ஏ கே.பி.பி.சாமி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்