கொரோனாவால் உயிரிழந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உருவப்படம் திறப்பு!

Default Image

கொரோனாவால் உயிரிழந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உருவப்படம் திறப்பு.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸ் தாக்கத்தால் சில அரசியல் பிரபலங்களும் பாதிக்கப்பட்டனர்.

இதனையடுத்து, திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் 10-ந்தேதி உயிரிழந்தார். இந்நிலையில், அறிவாலயத்தில் வைக்கப்பட்டு இருந்த ஜெ.அன்பழகனின் உருவப்படத்தை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து காணொலி மூலம் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இவருடன் இளைஞரணி கழக தலைவர் உதயநிதி மற்றும் கழக நிர்வாகிகள் இருந்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்