திமுக உறுப்பினர் நடுரோட்டில் வெட்டி கொலை! திருப்பூரில் பயங்கரம்!

Default Image

திருப்பூர் மாவட்டம் சிறுபூலுவப்பட்டியை சேர்ந்தவரும்,  திமுக உறுப்பினருமான பாலமுருகன் என்பவர் திருப்பூரில் நிதி நிறுவனம் ஒன்று நடத்தி வந்துள்ளார். இவர் நேற்று திருப்பூர் பிரதான சாலையில் செல்கையில் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் அவரை வழிமறித்து தாக்கி உள்ளனர்.

அவர்கள் வைத்து இருந்த அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் அவரை தாக்கி விட்டு அங்கிருந்து ஓடிவிட்டனர். அரிவாளால் வெட்டப்பட்டு பயங்கர ரத்த காயங்களுடன் பாலமுருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார்.

பொதுமக்கள் முன்னிலையில் நடந்த இந்த கோர சம்பவத்தை போலீஸார் தற்போது தீவிரமாக விசாரித்து வருகின்றனர். பாலமுருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தப்பி ஓடிய குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live - 06 03 2025
chandrababu naidu
ChandrababuNaidu
IND VS NZ CT 2025
mookuthi amman 2
sunil gavaskar rohit sharma
Actor Abhinay