திராவிட முன்னேற்ற கழகத்தின் 15-வது உட்கட்சி பொதுத்தேர்தல் வரும் பிப்ரவரி 21-ம் தேதி முதல் நடைபெறும் என்று திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமை அறிவித்தது. இந்த தேர்தலில் கிளை முதல், பேரூராட்சி , ஒன்றியம் , நகரம் மற்றும் மாநகரம் வாரியாக உட்கட்சி பதவிகளுக்கான தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது . இதனை தொடர்ந்து இதேபோல், மாவட்ட , தலைமை , பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதில், முதல் கட்டமாக கிளைக்கழகத்திற்கும் அதனை தொடர்ந்து பேரூராட்சி , ஒன்றியம், கழகத்திற்கும் தேர்தல் நடைபெறும் என்றும். இதன் பின்னர் புதிய பொதுக்குழு கூட்டப்பட்டு தலைவர் ,பொதுச்செயலாளர் ,பொருளாளர் மற்றும் தணிக்கைக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல்கள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று (பிப்ரவரி 17-ம் தேதி) இதற்க்காக திராவிட முன்னேற்ற கழக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த கூட்டம் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை சரியாக 5 மணிக்கு நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் உட்கட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…