திமுக +மதிமுக கட்சியின் கூட்டணி பேச்சுவார்த்தை!!

Default Image
  • திமுக +மதிமுக கட்சியின் கூட்டணி பேச்சுவார்த்தை இன்று  நடைபெற்றது. 
  • தொகுதிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் பேச்சுவார்த்தை இருந்தது என்று மதிமுக பொருளாளர் கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார். 

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருகையில் மத்தியில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜகவும் , காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகின்றது.மாநிலத்துக்கு மாநிலம் மாநில கட்சிகளுடன் கூட்டணி குறித்த வியூகங்களை வகுத்து வருகின்றனர்.

தமிழகத்தில் திமுக + காங்கிரஸ் கூட்டணிக்கு முடிவாகி தொகுதி பங்கீடு நடைபெற்றுள்ளது.இதில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.மேலும் திமுக கட்சியின் தோழமை கட்சிகளாக இருக்கும் சிபிஎம் , சிபிஐ , விசிக,மனிதநேய மக்கள் கட்சி மற்றும் மதிமுக கட்சிகள் சார்பில் விரைவில் தொகுதி பங்கீடு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று  மதிமுக  தொகுதி பங்கீடு தொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடத்தியது.மதிமுக சார்பில் மதிமுக பொருளாளர் கணேசமூர்த்தி கலந்து கொண்டார்.

இதன் பின்னர் மதிமுக பொருளாளர் கணேசமூர்த்தி கூறுகையில்,பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்துள்ளது. தொகுதிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் பேச்சுவார்த்தை இருந்தது.அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை இருக்கும். இரண்டு கட்சிகளின் தலைமையும் இறுதி முடிவை எட்டும் என்று மதிமுக பொருளாளர் கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்