ஆர்.கே.நகரில் திமுகவிற்கு ஏற்பட்ட படுதோல்விக்கான காரணங்கள் குறித்து ஆராய விசாரணைக் குழு!

Default Image

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் திமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டதுடன் டெபாசிட்டையும் இழந்தது. ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு திமுகவினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் திமுகவின் உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் வரும் 29ந்தேதி கட்சியின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.

ஆர்.கே.நகரில் ஏற்பட்ட தோல்விக்கான காரணங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் முக்கியமாக ஆராயப்படும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் கட்சி நிர்வாகிகளின் பணிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து முழு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

திமுக  சட்டமன்ற கொறடா சக்கரபாணி, சட்டத்துறை செயலாளர் கிரிராஜன், சட்டத்துறை இணைச் செயலாளர் கண்ணதாசன் ஆகிய மூவரும் அந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனர். ஆர்.கே.நகர் தேர்தல் குறித்து வரும் 31ந்தேதிக்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய அந்தக் குழுவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

source: dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்