திமுக தலைமையிலான அரசு சமூக நீதி அரசு – திருமாவளவன்

Default Image

பாடபுத்தகங்களில் உள்ள தலைவர்களின் சாதி பெயர்களை நீக்குகிற முயற்சியில் ஈடுபடுவது வரவேற்கத்தக்கது.

தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கான பாடப்புத்தகங்களை தமிழ்நாடு அரசு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் அச்சிட்டு வருகின்றன. இந்நிலையில்,பள்ளிப் பாடப்புத்தகங்களில் உள்ள தலைவர்களின் பெயர்களுக்கு பின்னால் உள்ள சாதிப்பெயர் நீக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள், திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான அரசு ஒரு சமூக நீதி அரசு. பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்களின் கொள்கைகளில் இயங்குகின்ற அரசு.

எனவே சாதியின் பெயரால் உள்ள பாகுபாடுகளை களைவதற்கு அனைத்து தளங்களிலும் முன் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதனடிப்படையில், பாடபுத்தகங்களில் உள்ள தலைவர்களின் சாதி பெயர்களை நீக்குகிற முயற்சியில் ஈடுபடுவது வரவேற்கத்தக்கது. இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி நெஞ்சார பாராட்டுகிறது என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்