திமுக தலைவர் ஸ்டாலின் சொல்லும் தொகுதியில் போட்டியிடுவேன் -கனிமொழி

Default Image

திமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே இந்த ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது என்று திமுக எம்.பி .கனிமொழி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக   திமுக எம்.பி .கனிமொழி கூறுகையில், 10 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு போட்டதின் முலம் திராவிட இயக்கத்தின் உண்மையான வாரிசாக இருக்க கூடிய இயக்கமாக திமுக இருப்பதை ஸ்டாலின் நிரூபித்துள்ளார்.அதிமுக அரசு மக்களின் பிரச்னைகளை புரிந்துகொள்ளாமல் அரசு வருவாயில் கவனம் செலுத்துகிறது. திமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே இந்த ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது.

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் மு.க.ஸ்டாலின் கிராம சபை கூட்டம் நடத்துவதை விமர்சிக்கிறார்கள். தேர்தலில் போட்டியிடுவது பற்றி திமுக தலைவர் ஸ்டாலின் எந்த முடிவு எடுத்தாலும் கட்டுப்படுவேன்.தமிழக அரசு செய்த நல்ல விஷயம் பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கியது தான்.வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் சொல்லும் தொகுதியில் போட்டியிடுவேன் என்று திமுக எம்.பி .கனிமொழி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்