கொரோனா பாதிப்பால் சுப்பிரமணியன் மறைவுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் இரங்கல்.
புதுச்சேரி மாநிலம் மக்கள் நீதி மையம் தலைவர் சுப்பிரமணியன் என்பவர் கொரோனா தொற்று காரணமாக அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
இந்நிலையில், இது குறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் ஒரு அறிக்கை ஒன்றை வெளிட்டுள்ளார். அதில், புதுச்சேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. எம்.ஏ.எஸ் சுப்பிரமணியன் அவர்கள் திடீரென்று செய்தியறிந்து மிகுந்த மறைவெய்தினார் என்ற வேதனைப்பட்டேன். அவரது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திரு. சுப்பிரமணியன், தற்போது மக்கள் நீதி மய்யத்தின் மாநிலத் தலைவராக இருந்தாலும், புதுச்சேரி மாநில தி.மு.க. அமைப்பாளராக இருந்து முன்பு கட்சிப் பணியாற்றி கழக வளர்ச்சிக்காகப் பெரிதும் பாடுபட்டவர். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் அன்பைப் பெற்றவர் என்பதை நானறிவேன். கொரோனா நோய்த் தொற்றால் அவர் உயிரிழந்திருப்பது புதுச்சேரி மக்களுக்குப் பேரிழப்பு
அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கும், மக்கள் நீதி மய்யத் தலைவர் சகோதரர் திரு. கமல்ஹாசன் அவர்களுக்கு எனது ஆறுதலையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கொரோனா நோய்த் தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பொதுச் சேவையில் ஈடுபட வேண்டும் என்று அனைவரையும் இந்தத் தருணத்தில் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த சுப்ரமணியன் மூன்று முறை உருளையன்பேட்டை, முதலியார்பேட்டை திமுக எம்எல்ஏ வாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…