எம்.பி வசந்தக்குமார் உருவ படத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை.!

Published by
பாலா கலியமூர்த்தி

சென்னையில் காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் மறைந்த எம்.பி வசந்தக்குமார் படத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை.

கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி வசந்த்குமாருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் தீவிர சிகிச்சையால் கொரோனாவில் இருந்து மீண்ட அவருக்கு நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டதால் அவர் கடந்த 28 ஆம் தேதி காலமானார். இவரது மறைவு பலருக்கு அதிர்ச்சியை அளித்தது. இதன்பின் பிரதமர் முதல் பல அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்தனர்.

இதனையடுத்து, வசந்தகுமாரின் உடல் சென்னை தி.நகரில் இருக்கும் அவரது இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் வசந்த் & கோ ஊழியர்களின் அஞ்சலிக்காகவும், தேனாம்பேட்டையில் இருக்கும் காமராஜர் அரங்கில் காங்கிரஸ் கட்சியினர் அஞ்சலிக்காகவும் வைக்கப்பட்டது. அதன்பின்னர், சொந்த ஊரான கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரத்துக்கு வசந்த்குமாரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. மறைந்த எம்பி வசந்த்குமாரின் உருவப்படம் சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் அலுவலகத்தில் வைக்கப்படுள்ளது.

இந்நிலையில், சென்னையில் காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் மறைந்த எம்.பி வசந்தக்குமார் படத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இவருடன் டி.ஆர்.பாலு, கனிமொழி, தயாநிதி அழகிரி மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி உள்ளிட்டோரும் மலர்தூவி மரியாதையை செலுத்தினர் என்பது குறிப்பிடப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

விஸ்வரூபமாகும் திருப்பதி லட்டு சர்ச்சை.! சந்திரபாபு நாயுடு vs ஜெகன் மோகன் ரெட்டி.!

ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…

12 mins ago

லட்டு விவகாரம் : தேவஸ்தானம் அறிக்கை தாக்கல் செய்ய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு உத்தரவு!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…

35 mins ago

“பிரியங்கா அக்கா அந்த மாதிரி ஆள் கிடையாது”…ஆதரவாக குரல் கொடுத்த அமீர்!

சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…

56 mins ago

துலிப் டிராபி : வெகு நாட்களுக்கு பிறகு சதமடித்த சஞ்சு சாம்சன்! டெஸ்ட் போட்டி கனவு பலிக்குமா?

அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…

59 mins ago

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து  மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…

2 hours ago

“திருப்பதியில் ‘மகா பாவம்’ செய்துவிட்டனர்” குமுறும் முன்னாள் தலைமை அர்ச்சகர்.!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…

2 hours ago