திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து 3-வது முறையாக கொளத்தூர் தொகுதியில் போட்டியிட விருப்பமனுவை இன்று அளிக்க உள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது. இதனையடுத்து, அணைத்து காட்சிகளிலும் விருப்பமனு விநியோகம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், திமுக சார்பில், 2021-தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத்தேர்தலில்,திமுக வேட்பாளராகப் போட்டியிட விரும்புவோர் 17-02-2021 முதல் 24-02-2021 வரை தலைமைக் கழகத்தில் விண்ணப்பம் செய்யலாம் என பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், 24-ம் தேதியுடன் விருப்பமனுக்களை பெறும் நடைமுறை நிறைவடையும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கட்சியினர் மத்தியில் காணப்படும் ஆர்வத்தின் காரணமாக, விருப்பமனுக்களை பெறும் நடைமுறையை 28 வரை நீட்டித்து பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், திமுக பிரபலங்கள் பலரும் தங்களது விருப்ப மனுக்களை தாக்கல் செய்த நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து 3-வது முறையாக கொளத்தூர் தொகுதியில் போட்டியிட விருப்பமனுவை இன்று அளிக்க உள்ளார்.
சென்னை : சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர் உச்சம் கண்டு வந்த தங்கம் விலை, இன்று சற்று ஆறுதல்…
சென்னை : இன்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா எனும் சி.என்.அண்ணாதுரை அவர்களின் 56வது நினைவு தினத்தை முன்னிட்டு…
மதுரை : இந்து கடவுள் முருகனின் அறுபடைவீடுகளில் முதல் வீடாக பார்க்கப்படுவது மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள முருகன் கோயில்.…
சென்னை : இன்று (பிப்ரவரி 3) மறைந்த முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,…
நெதர்லாந்து: டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் உலக சாம்பியனான குகேஷை 2-1 என்ற கணக்கில் டைபிரேக்கரில் வீழ்த்தி கிராண்ட்மாஸ்டர்…
மும்பை : கடைசி டி20 போட்டியில் இங்கிலாந்து அணியை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய…