பழனிசாமி முதலமைச்சர் ஆனதும் நீட் தமிழ்நாட்டிற்குள் வந்துவிட்டது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தல் வெகு விரைவில் நெருங்கிவரும் நிலையில், தற்போது அரசியல் கட்சிகள் தங்களுக்கான தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டன.திமுக சார்பில் அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்பில் திமுக மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் இன்று திருவள்ளூர் – சென்னை ஆகிய மாவட்டங்களில் திமுக மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.அந்த வகையில் திருத்தணி தொகுதி அம்மையார்குப்பம் ஊராட்சியில் மு.க.ஸ்டாலின் பொதுமக்களை சந்தித்து பேசினார்.
அப்பொழுது அவர் பேசுகையில்,நான் தொடர்ந்து அனைத்துக் கூட்டங்களிலும் சொல்லிக் கொண்டிருக்கிறேன். கலைஞர் முதலமைச்சராக இருந்த வரையில் நீட் தமிழ்நாட்டிற்குள் வரவில்லை. ஆனால் பழனிசாமி முதலமைச்சர் ஆனதும் நீட் தமிழ்நாட்டிற்குள் வந்துவிட்டது. இதிலிருந்து நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நாம் ஆட்சிக்கு வந்தவுடன், இந்த நீட்டிலிருந்து விலக்கு வாங்கி தருவேன் என்று உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பேசியுள்ளார்.
சென்னை : சூர்யா ரசிகர்களுடைய கவனம் முழுவதும் ரெட்ரோ படத்தின் மீது தான் இருக்கிறது. தரமான படங்களை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ்…
அலகாபாத் : சமீபத்தில் உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில், தை அமாவாசையை முன்னிட்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராட…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 5- போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஏற்கனவே, இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்றுவிட்ட நிலையில்,…
டெல்லி : விவோ நிறுவனம் அடுத்ததாக தங்களுடைய வி சிரிஸில் 50வ-வது மாடலை அறிமுகம் செய்யவிருக்கிறது. ஏற்கனவே, பிப்ரவரி 2025 இல்…
டெல்லி : மத்திய பட்ஜெட் 2025-க்கான கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி 31ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
மதுரை : திருப்பரங்குன்றம் மலையில் முருகன் கோயில், காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது போல, மற்றோரு புறம் சிக்கந்தர் பாதுஷா தர்கா…