கஷ்டமே தெரியாத ஒரு தலைவர்தான் திமுக தலைவர் ஸ்டாலின் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் மகளிர் சுய உதவி குழுவுடன் கலந்துரையாடலில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கின்ற அரசு அதிமுக அரசு என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், நான் உங்களைப்போல ஒரு கிராமத்தில் விவசாய குடும்பத்தில் வாழ்கிறவன். நான் மக்களோடு மக்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எனவே மக்களின் துன்பங்கள், பிரச்சினைகளை நன்கு அறிந்தவன். எனவே பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு என்ன வழி என ஆய்வு செய்து நாங்கள் திட்டங்களை தீட்டி செயல்படுத்துகிறோம்.
ஆனால் ஸ்டாலின் அப்படி அல்ல. அவர் முதல்வராக இருந்தார். திமுக தலைவராக இருந்தார். எம்எல்ஏ சீட் கொடுத்தார். எம்எல்ஏ ஆனார். எனவே அவருக்கு, மக்களுடைய கஷ்டங்கள் என்ன என்று தெரியாது. கஷ்டமே தெரியாத ஒரு தலைவர்தான் திமுக தலைவர் ஸ்டாலின் என்று தெரிவித்துள்ளார்.
மும்பை : கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்தார். அமெரிக்கவில் இறக்குமதி ஆகும்…
திருச்சி : இன்று காலை முதலே தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு தொடர்புடையவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி…
சென்னை : தமிழக பட்ஜெட் 2025-2026 முடிந்து அதன் பிறகு பட்ஜெட் மீதான விவாதம், துறை வாரியாக மானிய கோரிக்கைகள்…
டெல்லி : எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளை மீறி, வக்ஃப் வாரிய திருத்த மசோதா, 2025 மீதான முன்னோடியில்லாத 17 மணி…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : சென்னையில் TVH கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். எம்.ஆர்.சி.நகர்,…