பணி செய்யவிடாமல் தடுத்த புகாரில் திமுக பிரமுகர் இஸ்மாயில் கைது

Default Image

டெல்லியில் உள்ள நிஜாமுதீன் பகுதியில் கடந்த மாதம் 8 முதல் 20 ம் தேதி வரை தப்லிகி ஜமாத் என்ற இஸ்லாமிய மத அமைப்பு சார்பில் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த இஸ்லாமியர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் பங்கேற்று ஊர் திரும்பிய பலருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில், இதனால் இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 3374 ஆக உயர்ந்துள்ளது. 

அந்த வகையில் தமிழகத்தில் கொரோனாவால் 485 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், அதில் 422 பேர் டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டு திரும்பியவர்கள் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்திருந்தார். இதன் காரணமாக டெல்லி சென்று திரும்பியவர்கள் தாமாகவே முன்வந்து சுய பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டனர்.

இந்நிலையில் கோவை சாரமேடு பகுதியில் டெல்லி சென்று திரும்பியவர்களை கணக்கெடுக்க சென்ற அங்கன்வாடி ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்த புகாரில் திமுக பிரமுகர் இஸ்மாயில் கைது செய்யப்பட்டுள்ளார்.அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், பெண் துன்புறுத்தல் தடுப்புச ட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்