கடந்த மார்ச் 7ம் தேதி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலர் அன்பழகன் உடல் நலக்குறைவு மற்றும் வயது முதிர்வு காரணமாக தனது 97ஆம் அகவையில் காலமானார். தி.மு.க.வில் தலைவர் பதவிக்கு அடுத்ததாக திமுக பொதுச்செயலர் பதவி என்பது அதிகாரமிக்கது. எனவே இந்த பதவியை கைப்பற்ற தற்போதைய திமுக பொருளாளர் துரைமுருகன், முன்னாள் அமைச்சர்கள் நேரு, பெரியசாமி, டி.ஆர்.பாலு, பொன்முடி, அ.ராஜா உள்ளிட்ட கட்சியின் மூத்த முன்னோடிகள் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், புதிய பொதுச்செயலராக யாரை தேர்வு செய்யலாம் என்பது குறித்து தமிழகம் முமுழுவதும் கட்சியினரிடம் சர்வே எடுக்கும் பணியில் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் குழுவினரும் ஈடுப்பட்டுள்ளனர். இந்நிலையில் தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னை அறிவாலயத்தில் வரும் மார்ச் 29ம்தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் பொதுச்செயலர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளார். பொதுச்செயலராக யாரை தேர்வு செய்ய வேண்டும் என்பதை கட்சி தலைமை முன்பே தீர்மானித்து அந்த நபரை பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் ‘ திமுக பொதுச்செயலர் தேர்வுக்காக தி.மு.க. பொதுக்குழு கூட்டம் வரும் மார்ச் 29ம் தேதி காலை 10:00 மணிக்கு சென்னை அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் என் தலைமையில் நடைபெறும். ‘பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது பங்கேற்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…