கடந்த மார்ச் 7ம் தேதி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலர் அன்பழகன் உடல் நலக்குறைவு மற்றும் வயது முதிர்வு காரணமாக தனது 97ஆம் அகவையில் காலமானார். தி.மு.க.வில் தலைவர் பதவிக்கு அடுத்ததாக திமுக பொதுச்செயலர் பதவி என்பது அதிகாரமிக்கது. எனவே இந்த பதவியை கைப்பற்ற தற்போதைய திமுக பொருளாளர் துரைமுருகன், முன்னாள் அமைச்சர்கள் நேரு, பெரியசாமி, டி.ஆர்.பாலு, பொன்முடி, அ.ராஜா உள்ளிட்ட கட்சியின் மூத்த முன்னோடிகள் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், புதிய பொதுச்செயலராக யாரை தேர்வு செய்யலாம் என்பது குறித்து தமிழகம் முமுழுவதும் கட்சியினரிடம் சர்வே எடுக்கும் பணியில் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் குழுவினரும் ஈடுப்பட்டுள்ளனர். இந்நிலையில் தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னை அறிவாலயத்தில் வரும் மார்ச் 29ம்தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் பொதுச்செயலர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளார். பொதுச்செயலராக யாரை தேர்வு செய்ய வேண்டும் என்பதை கட்சி தலைமை முன்பே தீர்மானித்து அந்த நபரை பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் ‘ திமுக பொதுச்செயலர் தேர்வுக்காக தி.மு.க. பொதுக்குழு கூட்டம் வரும் மார்ச் 29ம் தேதி காலை 10:00 மணிக்கு சென்னை அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் என் தலைமையில் நடைபெறும். ‘பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது பங்கேற்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…