திமுக மா.,செயலாளர்கள் கூட்டத்தில் மக்களை ஒன்று திரட்டி ஒத்துழையாமை இயக்கம் நடத்த திமுக தீர்மானம்…

Default Image

திராவிட முன்னேற்ற கழகத்தின் உட்கட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இதற்க்கான ஆலோசனைக்கூட்டம் நேற்று  திராவிட முன்னேற்ற கழக் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்றனர். அந்தக் இந்தக் கூட்டத்தில், வரும் பிப்ரவரி மாதம்  21-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள திமுக உட்கட்சி தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், இந்த கூட்டத்தில், தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தையும், என்.ஆர்.சி-க்கு வழிகோலும் என்.பி.ஆரையும் உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி தமிழக மக்களை திரட்டி மாநிலம் முழுவதும் ஒத்துழையாமை இயக்கம் நடத்தப்படும் என்றும், அ.இ.அ.தி.மு.க ஆட்சியில் நடைபெற்ற அனைத்து  பணி நியமனங்கள்   குறித்து சி.பி.ஐ. விசாரணை உடனடியாக நடத்த வேண்டும் என்றும், ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட ஹைட்ரோ கார்பன் திட்டங்களையும் ரத்து செய்யும் வகையில் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டல சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும்  மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனால் திமுக வின் இந்த தீர்மானங்கள் எந்த அளவிற்க்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்