திருச்சி திமுகவில் புதிய மாவட்ட செயலாளர்கள்… திமுக தலைமை அறிவிப்பு…உடன்பிறப்புகள் ஒத்துழைக்க அறிவுரை..

Default Image
  • திருச்சி மாவட்டங்களை வடக்கு, மத்தி, தெற்கு என 3 ஆக பிரித்து, திமுக பொது செயலாளர் க.அன்பழகன் தற்போது  அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
  • அதற்கான புதிய மாவட்ட செயலாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்ட அறிவிப்பில். திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் கே.என்.நேரு, தற்போது திமுக தலைமைக் கழக முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Image result for திமுக திருச்சி மாவட்ட புதிய செயலாளர்கள் நியமனம்

இதனால் திருச்சி வடக்கு- திருச்சி தெற்கு ஆகிய மாவட்டங்கள், திருச்சி வடக்கு-திருச்சி மத்திய- திருச்சி தெற்கு என மூன்று மாவட்டங்களாக திருச்சி பிரிக்கப்படுகிறது. இந்த பிரிக்கப்பட்ட மாவட்டங்களின் செயலாளர்களாக,

  • முசிறி, துறையூர் மண்ணச்சநல்லூர் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய புதிய திருச்சி வடக்கு மாவட்ட செயலாளராக காடுவெட்டி தியாகராஜனும்,
  • திருச்சி மேற்கு, திருவரங்கம், லால்குடி ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய புதிய திருச்சி மத்திய மாவட்ட பொறுப்பாளராக வைரமணியும்,
  • திருவெறும்பூர், மணப்பாறை, திருச்சி கிழக்கு ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய புதிய திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்.எல்.ஏவும் நியமிக்கப்படுகிறார்கள்.

ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட அந்தந்த மாவட்டத்திற்குரிய  மாவட்ட நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் இவர்களுடன் இணைந்து பணியாற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று இந்த  அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்