கொரோனா தடுப்பூசி பற்றாக்குறைக்கு திமுகதான் காரணம் என மாநில பாஜக தலைவர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
இன்று சென்னை உட்பட 4 மாவட்டங்களில் வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, வடபழனி முருகன் கோவிலில் மாநில பாஜக தலைவர் எல்.முருகன் வழிபாடு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன் பல தளர்வுகள் அளிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் இன்னும் கொரோனா முடியவில்லை, நாம் இன்னும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். முககவசம் கட்டாயமாக அணிய வேண்டும்.
சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். அனைவரும் கட்டாயமாக தடுப்பூசியை நாம் அனைவரும் செலுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் நாம் இந்த கொரோனாவை வெல்ல முடியும். ஆகையால் அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்தி கொள்வோம். இன்றைக்கு தளர்வுகள் வந்துடுச்சுனு கொரோனா முடிந்ததாக நாம் யாருமே அர்த்தம் கொள்ள வேண்டாம் என்பதே என்னுடைய கருத்து.
வெள்ளை அறிக்கை வெளியிடுங்கள். தமிழக அரசு மத்திய அரசாங்கத்தில் இருந்து எவ்வளவு தடுப்பூசி வாங்கியிருக்கிறீர்கள்..? எந்த மாவட்டத்தில் எவ்வளவு தடுப்பூசி கொடுத்திருக்கிறீர்கள்..? எந்தெந்த இடத்தில் எவ்வளவு தடுப்பூசி போட்டு இருக்கீங்க..? எவ்வளவு தடுப்பூசி போடாமல் வீண் செய்து இருக்கீங்க..? தடுப்பூசி ஆனது இந்த மாதம் மட்டும் 42 லட்சம் தடுப்பூசி தமிழக அரசுக்கு கொடுத்து இருக்கிறோம். தடுப்பூசி பற்றாக்குறைக்கு திமுக தான் காரணம் என தெரிவித்தார்.
ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…
திருவனந்தபுரம் : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலம் தாழ்த்துகிறார், அரசியலமைப்பு சட்ட…
ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…
ஜெய்ப்பூர் : இன்று (ஏப்ரல் 13) ஐபிஎல் 2025-ல் 28வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியும் , ராயல்…
மதுரை : கோவை போலீசார் இன்று ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்ததாக செய்திகள் வெளியாகின. அதில், மதுரையை சேர்ந்த ரவுடி…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி தான். ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு போன்ற கோரிக்கைகள் தமிழக…