#BREAKING: சிறுபான்மையினர் மக்களுக்கு திமுக நிச்சயம் பாதுகாவலர்கள் இல்லை – டிடிவி தினகரன்.!

Default Image

சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக  பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழகத்தில் ஒரு சரித்திர சாதனை படைத்து அம்மாவின் ஆட்சி மீண்டும் உருவாக்க வேண்டும். இயக்கத்தை மீட்டு எடுக்கும் பணி தொடர்ந்து நடைபெறும். வரும் தேர்தலில் மாபெரும் வெற்றியை நாம் பெறுவோம் என்ற குறிக்கோளுடன் பயணிக்க வேண்டும். சில கட்சிகளுக்கு ஏஜெண்டுகளாக இருந்துகொண்டு தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கிறார்கள். நாங்கள் எதிர்பார்த்த குக்கர் சின்னத்தையே தேர்தல் ஆணையம் எங்களுக்கு அளித்தது.

அமமுக அணி தான் முதல் அணியாக இருக்கும். திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் இருக்கும் அணியாக இருக்கும். தொண்டர்கள் ராணுவ கட்டுப்பாட்டுடன் சின்னம்மாவை வரவேற்றனர். சிறுபான்மையினர் மக்களுக்கு திமுக நிச்சயம் பாதுகாவலர்கள் இல்லை; உங்களுக்கு யார் பாதுகாப்பாக இருப்பார்கள் என்பதை சிறுபான்மையின மக்கள் உணர்ந்து வாக்களிக்க வேண்டும் என தெரிவித்தார்.

எங்களது அணியில் தேசியக் கட்சிகள், மாநிலக் கட்சிகள் வருமா என இப்போது கூறமுடியாது. சசிகலா சட்டப் போராட்டம் நடத்துவதால் அமமுக தலைவர் பதவியை அவருக்காக காலியாக வைக்கப்பட்டுள்ளது. மூன்றாவது அணி இல்லை; அமமுக அமைக்கும் அணி தான் முதல் அணி என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live - 06 03 2025
sunil gavaskar rohit sharma
Actor Abhinay
gold price
Tamilisai Soundararajan Selvaperunthagai
rain update
Chennai high court