மின்சார கட்டணம், சொத்துவரி உயர்வு ஆகியவற்றை மறைப்பதற்காகவே திமுக இந்த சோதனையை மேற்கொண்டு வருகிறது.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் மீது, அதிமுக ஆட்சியின் போது ஊழல் மற்றும் முறைகேடு செய்ததாக லஞ்ச ஒழிப்பு காவல் துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து, அவர்களுக்கு சொந்தமான 39 இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகிறனர்.
இது குறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறுகையில், அரசியல் காழ்புணர்ச்சியின் காரணமாக தான் முன்னாள் அமைச்சர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெறுகிறது. அதிமுகவில் ஓபிஎஸ்க்கு இடம் இல்லை என்கிற உச்சநீதிமன்ற தீர்ப்பின் மகிழ்ச்சியை மறைப்பதற்காகவும், மின்சார கட்டணம், சொத்துவரி உயர்வு ஆகியவற்றை மறைப்பதற்காகவும் திமுக இந்த சோதனையை மேற்கொண்டு வருகிறது.
எந்த சோதனை மேற்கொண்டாலும் அவை அனைத்தையும் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்றும், அதிமுகவில் செல்வாக்கை சரிக்கவே முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை என்றும், கண்ணியமிக்க காவல்துறை திமுக ஆட்சியில் ஏவல் துறையாக மாறி இருக்கிறது என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…