இவை எல்லாவற்றையும் மறைப்பதற்காகவே திமுக இந்த சோதனையை நடத்தி வருகிறது – ஆர்.பி.உதயகுமார்

Default Image

மின்சார கட்டணம், சொத்துவரி உயர்வு  ஆகியவற்றை மறைப்பதற்காகவே திமுக இந்த சோதனையை மேற்கொண்டு வருகிறது.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் மீது, அதிமுக ஆட்சியின் போது ஊழல் மற்றும் முறைகேடு செய்ததாக லஞ்ச ஒழிப்பு காவல் துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து, அவர்களுக்கு சொந்தமான 39 இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகிறனர்.

இது குறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறுகையில், அரசியல் காழ்புணர்ச்சியின் காரணமாக தான் முன்னாள் அமைச்சர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெறுகிறது. அதிமுகவில் ஓபிஎஸ்க்கு இடம் இல்லை என்கிற உச்சநீதிமன்ற தீர்ப்பின் மகிழ்ச்சியை மறைப்பதற்காகவும், மின்சார கட்டணம், சொத்துவரி உயர்வு  ஆகியவற்றை மறைப்பதற்காகவும் திமுக இந்த சோதனையை மேற்கொண்டு வருகிறது.

எந்த சோதனை மேற்கொண்டாலும் அவை அனைத்தையும் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்றும், அதிமுகவில் செல்வாக்கை சரிக்கவே முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை என்றும், கண்ணியமிக்க காவல்துறை திமுக ஆட்சியில் ஏவல் துறையாக மாறி இருக்கிறது என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்