தேர்தல் நேரம் மட்டுமல்ல. எப்போதும் மக்களுடன் இணைந்து இருக்கும் பேரியக்கம் திமுக.
தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. இது குறித்து தமிழக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள நிலையில், தற்போது பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், தேர்தல் நேரம் மட்டுமல்ல. எப்போதும் மக்களுடன் இணைந்து இருக்கும் பேரியக்கம் திமுக. கொரோனா சமயங்களில் மக்களுக்கு ஒன்றிணைவோம் வா என்னும் செயல்பாட்டின் மூலம், கட்சி பாகுபாடின்றி உணவு, மருத்துவ உதவி, அத்தியாவசிய தேவைகளை திமுக நிறைவேற்றியது.
கோடை காலத்தில் மக்களின் தாகம் தணிக்க திமுகவின் சார்பில் தண்ணீர் பந்தல் அமைத்திடுங்கள். இரண்டாவது கொரோனா அலை குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி, உங்கள் மக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கல், வாய்ப்புள்ள இடங்களில் முகக்கவசம், சானிடைசர்களை வழங்குங்கள். தேர்தல் முடிவுகளில் நல்ல தீர்ப்பு நிச்சயம் வரும். எனினும் அது வரை காத்திருக்காமல் மக்களுக்கான பணியை தொடர்ந்திட ஒன்றிணைவோம் வாருங்கள் உடன்பிறப்புகளே..! என்று தெரிவித்துள்ளார்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…