“திமுக ஒரு திருட்டு கட்சி, மக்களை ஏமாற்றும் கட்சி”.! அதிமுக அமைச்சர் கடும் விமர்சனம்.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுக சார்பில், மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 103-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா தலைமையில் நடைபெற்றது.
  • தில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டு அதில் சிறப்புரையாற்றிய அவர் திமுகவை பொருத்தமட்டில் அது ஒரு திருட்டு கட்சி, மக்களை ஏமாற்றும் கட்சி என்று விமர்சித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுக சார்பில், மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 103-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா தலைமையில் நடைபெற்றது. இதில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், எம்.ஜி.ஆருக்கு 103 வயது ஆகிவிட்டது என்றால் யாரும் நம்பமாட்டார்கள் என்றும், லதாவை தூக்கிக்கொண்டு டூயட் பாடும் எம்ஜிஆரை தான் அனைவருக்கும் தெரியும். எம்ஜிஆர் இளமையாகவே இருந்தார், எளிமையாகவே வாழ்ந்தார், இளமையாகவே மறைந்தார், வாழுகிற வரை, இறக்கிற வரை மக்களுக்காகவே உழைத்துக்கொண்டு இருந்தார் என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து, அதிமுக இயக்கத்தை வீழ்த்தி விடலாம் என்று நினைத்தால் எதிர்க் கட்சிகளுக்கு தோல்வி பரிசாக காத்திருக்கிறது என்றும், அதிமுகவை வீழ்த்துவதற்கு இன்னொருவன் பிறந்துதான் வரவேண்டும் என்றார். நாட்டில் இனச்சண்டை, மதச்சண்டை எல்லாவற்றையும் தூண்டிவிட்டு அனைவரையும் சண்டை போட வைத்து அதில் குளிர் காய்கின்ற கட்சி திமுக என்று விமர்சித்தார். குத்து சண்டை, சிலம்பாட்டம் போன்ற வித்தைகளை தெரிந்தவர்கள் அதிமுகவினர். கழகத்தின் கட்டுப்பாட்டிற்க்காக அனைவரும் ஒழுக்கமாக இருக்கிறார்கள். திமுக காரர்கள் சண்டைபோட்டு ஜெயிக்க நினைத்தால் எந்த காலத்திலும் அதிமுகவை ஜெயிக்க முடியாது என தெரிவித்தார்.
இந்நிலையில், மக்கள் வாக்களிப்பதில் ஒரு தடவை தவறு செய்தால் 5 வருடங்களுக்கு திமுகவினரை கேள்வி கேட்க முடியாது. திமுகவினர் ஆட்சிக்கு வந்தால் ஒன்றியத்தில் ஊழல் செய்து ரசீது போடச் சொல்வார்கள் என்ற அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, எல்லாவிதமான சித்து விளையாட்டுகளும் தெரியும் என்றும், உள்ளாட்சித் தேர்தலில் நாங்கள் சற்று அடங்கி போனோம். அதில் ஒரு சில இடங்களில் கொஞ்சம் திமுகவினர் விளையாடி பார்த்தனர். ஆனால் தமிழகத்திலேயே அதிகப்படியான மாவட்ட கவுன்சிலர்கள் வெற்றி பெற்ற மாவட்டம் விருதுநகர் மாவட்டம் என்று பேசினார். திமுகவை பொருத்தமட்டில் அது ஒரு திருட்டு கட்சி, மக்களை ஏமாற்றும் கட்சி என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசினார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம்! உலக நாட்டு தலைவர்கள் நேரில் மரியாதை!

வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…

10 hours ago

“ஓட்டு மட்டுமே குறிக்கோள் இல்லை., மக்களோடு பேசுங்கள்!” விஜய் கொடுத்த ‘குட்டி’ அட்வைஸ்!

கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…

10 hours ago

ஈரான் துறைமுகத்தில் பயங்கர வெடி விபத்து! 300க்கும் மேற்பட்டோர் காயம்!

தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…

11 hours ago

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கில் சிறிய தீ விபத்து? “ஒதுங்கி நில்லுங்கள்!” விஜய் அட்வைஸ்!

கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…

12 hours ago

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கு.., என்ன பேசப்போகிறார் விஜய்?

கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…

12 hours ago

கட்டாய கடன் வசூல்., 3 ஆண்டுகள் சிறை! புதிய சட்ட மசோதா விவரங்கள் இதோ…

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…

15 hours ago