திமுக மொத்த மக்களையும் வாட்டி வதைக்கின்ற அரசாக விளங்கி கொண்டிருக்கிறது – ஓபிஎஸ்

Default Image

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்தி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அறிக்கை.

கடந்த 2 வாரங்களாக பெட்ரோல் டீசல் விலை அதிகரித்து வரும் நிலையில், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்தி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “சொன்னதைச் செய்வோம்” எனச் சொல்லி பல வாக்குறுதிகளை அள்ளி வீசி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ள தி.மு.க., சொல்லாததை செய்கின்ற அரசாக, மக்கள் விரோதச் செயல்களை மேற்கொள்கின்ற அரசாக, விலைவாசி உயர்விற்கு வழிவகுக்கின்ற அரசாக, மொத்தத்தில் மக்களை வாட்டி வதைக்கின்ற அரசாக விளங்கிக் கொண்டிருக்கின்றது.

அனைத்துத் தரப்பு மக்களின் நலத்தையும் கருத்தில் கொண்டு, பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாயும் குறைக்கப்படும் என்று தி.மு.க. அரசு வாக்குறுதி அளித்து இருந்தது. ஆட்சிக்கு வந்த பிறகு பெட்ரோல் விலையை மட்டும் லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்தது.

பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் அதிகரித்துக் கொண்டு வருவதை கருத்தில் கொண்டு, மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுத்து, திமுக அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வண்ணம் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என திமுக அரசை வலியுறுத்தியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்