துப்புரவு பணியாளர்களுக்கு பாத பூஜை செய்து கௌரவித்த திமுகவினர்!

Published by
மணிகண்டன்

கடலூர் மாவட்டம் கிள்ளை பேரூராட்சி பகுதியில் வேலை பார்த்து வரும் 36 துப்புரவு தொழிலாளர்களுக்கு அப்பகுதி திமுகவினர் பாத பூஜை செய்து கௌரவித்தனர்.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால், பெரும்பாலான தொழிலாளர்கள் வேலைக்கு செல்வதில்லை. மருத்துவர்கள், காவலர்கள் , துப்புரவு பணியாளர்கள் ஆகியோர் தினமும்  கொரோனாவுக்கு எதிரான தனது வேலையை செவ்வனே செய்துவருகின்றனர்.

தினமும் சாலை, தெருவோரங்களில் இருக்கும் குப்பைகளை அகற்றி ஊரை சுத்தமாக வைத்து நோய் வருமுன் மக்களை காக்க துப்புரவு தொழிலாளர்கள் தங்கள் வேலைகளை அர்ப்பணிப்புடன் செய்து வருகின்றனர்.

இவர்களை கௌரவிக்கும் வகையில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே  கிள்ளை பேரூராட்சி பகுதியில் வேலை பார்த்து வரும் 36 துப்புரவு தொழிலாளர்களுக்கு அப்பகுதி திமுகவினர் பாத பூஜை செய்து கௌரவித்தனர். திமுகவினரின் இந்த செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் பாராட்டை பெற்றுவருகிறது.

பாத பூஜையை தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் பிரியாணி பரிமாறப்பட்டது. பின்னர், அவர்களுக்கு அரிசி, மளிகை, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் அடங்கிய நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கிள்ளை பேரூராட்சி செயல் அலுவலர் தங்கவேல்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர்  ரமேஷ்பாபு, மாவட்டக்குழு உறுப்பினர் கற்பனைச்செல்வம் மேலும், திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

1 hour ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…

1 hour ago

“சுயமரியாதை முக்கியம்…கடவுளுக்கு மட்டும் தலைவணங்குங்கள்”…மணிமேகலை அட்வைஸ்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…

1 hour ago

இன்னும் 10 நாளில் உதயநிதி துணை முதல்வர்.! அமைச்சர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…

2 hours ago

அக்டோபர் 27இல் த.வெ.க மாநாடு.! விஜய் அறிவிப்பு.!

சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…

2 hours ago

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

17 hours ago