அம்மா உணவகத்திலிருந்த ஜெயலலிதாவின் படத்தை மறைத்து முதல்வர் மற்றும் கருணாநிதியின் படத்தை திமுகவினர் ஒட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவேற்காடு பகுதியில் இயங்கி வரும் அம்மா உணவகத்தில் இருந்த ஜெயலலிதா உருவப்படத்தை இன்று காலை திமுகவினர் மறைத்து முதல்வர் முக ஸ்டாலின் அவர்களது புகைப்படத்தை ஒட்டி உள்ளனர். ஒருபுறம் கருணாநிதியின் புகைப்படமும், மற்றொருபுறம் முதல்வர் ஸ்டாலின் புகைப்படத்தையும் ஒட்டியுள்ளனர்.
இது தொடர்பாக தகவல் அறிந்ததும் அவ்விடத்திற்கு வந்த அதிமுகவினர் அங்கு ஜெயலலிதாவின் உருவ படத்தை மறைத்த திமுகவினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஜெயலலிதா படம் மீது ஒட்டப்பட்டிருந்த கருணாநிதியின் படத்தை அகற்றி, பேச்சுவார்த்தை நடத்தி இரு தரப்பினரையும் அனுப்பி வைத்துள்ளனர்.
மதுரை : நேற்று மதுரை கே.கே நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிண்டர் கார்டன் எனும் தனியார் மழலையர் பள்ளியில்…
சென்னை : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து நேற்று டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் முப்படை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம்…
இஸ்லாமாபாத் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். அதைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக, இந்தியா…
காஷ்மீர் : ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் தேசியத் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா,…
சென்னை : ஐபிஎல்லின் இன்றைய லீக் போட்டியில் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7…
விசாகப்பட்டினம் : ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே உள்ள சிம்மாச்சலம் ஸ்ரீ நரசிம்ம சுவாமி கோயில் சந்தன உற்சவ விழாவின்போது சுவர்…