நேற்று திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு குறிப்பிட்ட சில இடங்களை ஒதுக்கீடு செய்தது. இதைதொடர்ந்து, கூட்டணி கட்சிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு தங்களது வேட்பாளர்களை அறிவித்தனர்.
இன்று மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், துணை தலைவர் பேரூராட்சி தலைவர், துணை தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட சில இடங்களில் திமுக வேட்பாளர்கள் எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றனர். அதன்படி,
தருமபுரி:
விசிகவுக்கு ஒதுக்கப்பட்ட பொ.மல்லாபுரம் பேரூராட்சித் தலைவர் பதவிக்கு திமுக வேட்பாளர் வெற்றி பெற்றார்.
ஸ்ரீபெரும்புதூர்:
காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட ஸ்ரீபெரும்புதூர் தலைவர் பதவிக்கு திமுக வெற்றி பெற்றார்.
கரூர்:
இ.கம்யூ-க்கு ஒதுக்கப்பட்ட கரூர் மாவட்டம் புலியூர் பேரூராட்சித் தலைவர் பதவிக்கு திமுக வேட்பாளர் வெற்றி பெற்றார்.
கடலூர்:
மங்கலம்பேட்டை பேரூராட்சி தலைவர் தேர்தலில் காங்கிரசை வீழ்த்தி திமுக வேட்பாளர் வெற்றி பெற்றார்.
நெல்லிக்குப்பம் நகராட்சி தலைவர் தேர்தலில் விசிக வேட்பாளர் தோல்வி விசிக வேட்பாளரை வீழ்த்தி திமுக வேட்பாளர் வெற்றி பெற்றார்.
திருப்பூர் மாவட்டம்:
திருமுருகன்பூண்டியில் மார்க்சிஸ்ட் கம்யூ வேட்பாளர் வீழ்த்தி திமுக வேட்பாளர் வெற்றி பெற்றார்.
கோவை மாவட்டம்:
கருமத்தம்பட்டி நகராட்சியில் காங்கிரஸ் வேட்பாளரை வீழ்த்தி திமுக வேட்பாளர் வெற்றி பெற்றார்.
தேனி மாவட்டம்:
அல்லிநகரம் நகராட்சி தலைவர் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை வீழ்த்தி திமுக வேட்பாளர் வெற்றி பெற்றார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…