‘ஆன்லைன் அரசியல் இயக்கமாக மாறிவிட்டது திமுக’ – அமைச்சர் கடம்பூர் ராஜூ.!

Published by
பாலா கலியமூர்த்தி

ஆன்லைன் அரசியல் இயக்கமாக மாறிவிட்டது திமுக என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

கோவில்பட்டியில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், திமுக மக்களை சந்திக்க தயாராக இல்லை. ஆன்லைன் அரசியலுக்கு வந்து விட்டனர். கொரோனா பரவலை ஒரு சாக்காக வைத்துக்கொண்டு ஆன்லைன் அரசியல் செய்து வருகின்றது. அரசியல், கட்சி பணிகளை ஆன்லைன் மூலம் செய்யும் நிலைக்கு திமுக தள்ளப்பட்டுள்ளது.

தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க முடியாத நிலைக்கு திமுக தள்ளப்பட்டுள்ளது. இதற்கு காரணம் திமுக சுயமாக சிந்திக்கவில்லை. திமுக தானாக இயங்கவில்லை. பிரசாந்த் கிஷோர் குழுவின் மூலம் இயக்கப்படுகிறது. தேர்தல் நெருங்க நெருங்க திமுக கூட்டணியில் ஒரு கட்சி கூட இருக்காது. அதிமுக சுயமாக இயங்கக்கூடிய இயக்கம். எங்களை யாராலும் இயக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.  சுயமாக இயங்க முடியாமல் ஒரு குழுவிடம் ஒப்படைத்து அரசியல் செய்கிறது திமுக என்று கூறியுள்ளார்.

மேலும், அரசியல் அனுபவம் உள்ள திமுக பொதுச்செயலாளர் துறை முருகன் போன்றோர் இதை எல்லாம் மன கசப்புடன் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறார். அதிமுகவில் செயற்குழு கூட்டம் கூட தேதி அறிவிக்க வேண்டும் என்றால் கூட ஜனநாயக ரீதியாக அழைத்து பேசி அறிவிக்கும் நிலை உள்ளது. இதனைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் மொழி கொள்கையில் மத்திய அரசு என்ன நிலைப்பாடு எடுத்தாலும், தமிழகத்தில் இருமொழி கொள்கைதான் என்று முதல்வர் தெளிவுபடுத்தியுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

5 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

5 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

5 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

5 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

5 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

6 hours ago