“பெண்களுக்குக் கழக அரசு துணை நிற்கும்” – முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

Published by
Edison

பெண்களின் கலாச்சார, அரசியல் மற்றும் சமூக பொருளாதார சாதனைகளை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் மார்ச் 8 ஆம் தேதி அன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.

அதன்படி,மார்ச் 8 ஆம் தேதியான இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.இந்நிலையில்,அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் பெண்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில்,பெண்கள், யாருடைய தயவையும் எதிர்பார்க்காமல் அவரவர்கள் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்றும்,புத்துலக ஆக்கத்தில் முன் நிற்கும் பெண்களுக்குக் கழக அரசு துணை நிற்கும் என்றும் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் கூறுகையில்:

“புத்துலக ஆக்கத்திற்கு இன்றியமையாது இருக்கும் மகளிர் அனைவருக்கும் மகளிர் நாள் வாழ்த்துகள்.இரத்த பேதம் – பால் பேதம் கூடாது என்ற முழக்கத்தோடு, ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்கான சமூக விடுதலைக்காகப் போராடும் இயக்கம் திராவிட இயக்கம்.

அந்த வகையில்,பெண்களின் சமூக – பொருளாதார உரிமைகளை மீட்டளிக்க முன்னத்தி ஏராக தி.மு.க. செயல்படுத்திய திட்டங்கள் இன்று நாட்டுக்கே வழிகாட்டியாக அமைந்துள்ளன.

சொற்களால் பெண்களைப் போற்றி, செயல்களால் அவர்களை அடிமைப்படுத்திய பழமைவாத காலம் மாறி வருகிறது.
பெண்கள் நலனும் உரிமையும் காக்கப்படும்,அதற்குத் திராவிட மாடல் அரசு என்றும் துணை நிற்கும்.

அடிமைத்தனத்தைத் தகர்த்தெறியும் வலிமைமிகு போர்க்குரல் பெண்களேதான்.பெண்கள், யாருடைய தயவையும் எதிர்பார்க்காமல் அவரவர்கள் சொந்தக் காலில் நிற்க வேண்டும்.அவர்களுக்குத் தன்மானத்தோடு வாழக்கூடிய அளவிற்குத் தன்னம்பிக்கையைத் தந்தாக வேண்டும்.அந்த அடிப்படையில்தான் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டது மகளிர் சுய உதவிக் குழுக்கள்.

இதன்மூலம்,இந்தியாவிலேயே முதன்முதலாகப் பெண்களுடைய பொருளாதார முன்னேற்றத்திற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலான ஆட்சி.அந்த வகையில், புத்துலக ஆக்கத்தில் முன் நிற்கும் பெண்களுக்குக் கழக அரசு துணைநிற்கும்”,என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

15 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

15 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

15 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

16 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

16 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

16 hours ago