வாக்குறுதிகளை காற்றிலே பறக்க விடும் திமுக அரசு – ஆர்.பி. உதயகுமார்

Published by
லீனா

வெங்காயத்தை உரிக்க உரிக்க தோல் தான் மிச்சமாக இருந்து, கண்களில் கண்ணீர் வருவதைத் தவிர உரித்துப் பார்த்தால் உள்ளே ஒன்றும் இல்லை என்பது போல தான் திமுக கூறியுள்ள 202 திட்டங்களும் மக்கள் மத்தியில் சென்று சேரவில்லை.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள இளையரசனேந்தல் குறுவட்டத்தில் உள்ள 12 ஊராட்சிகளின் தேர்தல் தொடர்பான அதிமுகவினருடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜு ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மக்களுக்கு திமுக கொடுத்த வாக்குறுதிகளை காற்றில் பறக்க விடப்பட்ட யதார்த்த நிலையை மக்கள் புரிந்துள்ளார்கள்.

202 வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அறிக்கையில் தெரிவித்தார். ஆனால் மக்கள் மத்தியில் அதை செயல்படுத்தியதியதற்கான எந்தப் பதிவும் இல்லை. வெங்காயத்தை உரிக்க உரிக்க தோல் தான் மிச்சமாக இருந்து, கண்களில் கண்ணீர் வருவதைத் தவிர உரித்துப் பார்த்தால் உள்ளே ஒன்றும் இல்லை என்பது போல தான் திமுக கூறியுள்ள 202 திட்டங்களும் மக்கள் மத்தியில் சென்று சேரவில்லை என்று விமர்சித்துள்ளார்.

மேலும் தற்போது தமிழகம் முழுவதும் மின்தடை ஏற்படுகிறது. அதை போன்று சட்ட ஒழுங்கு பெரிய சவாலாக இருக்கிறது. அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதிப் பூங்காவாக இருந்தது.  இவற்றையெல்லாம் மக்கள் எண்ணி பார்த்ததால் தான் நாங்கள் செல்கின்ற இடங்களில் எல்லாம் எங்களுக்கு வரவேற்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Recent Posts

சிவா மனசுல சக்தி 2 எடுக்க போறேன்! எம்.ராஜேஷ் கொடுத்த சூப்பர் அப்டேட்!

சிவா மனசுல சக்தி 2 எடுக்க போறேன்! எம்.ராஜேஷ் கொடுத்த சூப்பர் அப்டேட்!

சென்னை : 90ஸ் கிட்ஸ்கள் மறக்க முடியாத படங்களின் வரிசையில் பல படங்கள் இருக்கிறது. அதில் முக்கியமான படம் என்றால்,…

8 mins ago

இரானி கோப்பை : ‘எல்லாம் என் தம்பிக்காக’.. குடும்பத்திற்கு செய்த சத்தியத்தை நிறைவேற்றிய சர்ஃபரஸ் கான் !

லக்னோ : நடைபெற்று வரும் இரானி கோப்பை டெஸ்ட் போட்டியில் மும்பை அணியும் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியும் மோதி…

29 mins ago

13 மாவட்டங்களில் இன்று கனமழை.. வடகிழக்கு பருவமழை அக்,15ம் தேதி தொடக்கம்.!

சென்னை : வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15ம் தேதியே தொடங்க இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.…

35 mins ago

“மதுக்கடைகளை மூடுவது திமுகவுக்கு நல்லது.!” மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் திருமா.!

சென்னை : மது மற்றும் போதைப்பொருட்களை நாடு தழுவிய அளவில் முழுதாக தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மது ஒழிப்பு…

59 mins ago

வார இறுதி நாள்.. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்!!

சென்னை : கடந்த சில நாள்களாக தங்கம் விலை உயர்ந்து, நாளுக்கு நாள் புதிய உச்சம் தொட்டு வருகிறது. ஆனால்,…

1 hour ago

IND-W vs NZ-W : சர்ச்சையாக மாறிய ஹர்மன்ப்ரீத் செய்த ரன் அவுட் ..! கடுப்பான அஸ்வின்!

துபாய் :2024 மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் 4-வது போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில்,…

1 hour ago