நாமக்கல்:திமுக ஆன்மீகத்திற்கு எதிரான அரசு அல்ல என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் நடை திறக்கப்பட்டு 1,00,008 வடமாலை சாத்தப்பட்டுள்ளது. மேலும்,கோயில் வளாகம் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி,இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.குறிப்பாக,இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு,சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் உள்ளிட்டோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
இந்நிலையில்,திமுக ஆன்மீகத்திற்கு எதிரான அரசு அல்ல என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக,செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:”அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்களை அர்ச்சகரூ.ர்களாக கோயில்களில் நியமிக்கலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில்,தமிழ்கத்தில் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த 24 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் அவர்கள் வழங்கியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல்,அர்ச்சகர் பயிற்சி பெறுவதற்கு வழங்ப்பட்டு வந்த ஊக்கத்தொகை ஆயிரம் ரூபாயிலிருந்து ரூ.3 ஆயிரம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
திமுக அரசு ஆன்மீகத்திற்கு எதிரானது அல்ல.திமுக அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் 437 பேரிடம் இருந்து ரூ.1640 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.கோயில் நிலங்களை மீட்கும் வேட்டை தொடரும். தமிழக அரசின் அனைத்து நல்ல திட்டங்களையும் பாஜக எதிர்த்து வருகிறது.இதற்கு பதிலாக ஆக்கபூர்வமான பணிகளுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை செயலாற்ற வேண்டும்”,என்று தெரிவித்துள்ளார்.
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் ஏப்ரல் 22 மாலை நடந்த பயங்கரவாத தாக்குதலில்…
நாட்டையே உலுக்கிய ஜம்மு-காஷ்மீர் பாஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கர பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஒரு நாள் கழித்து, பாகிஸ்தான்…
ஸ்ரீநகர் : இந்தியர்களுக்கு மற்றுமொரு கருப்பு நாளாக காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் அமைந்திருக்கிறது. ஆம், நேற்றைய தினம் ஜம்மு…
ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் இதுவரை வெளியான தகவலின்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் இதுவரை வெளியான தகவலின்…
ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்தத் தாக்குதலில், திருமணமாகி வெறும் மூன்று…