“திமுக….தீய சக்தி கூட்டம்” – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு!

Default Image

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் நாங்கள் ஒன்று கூடி அஞ்சலி செலுத்தினால் ஓமிக்ரான் பரவும் என்று தடைபோட்ட முதல்வர் ஸ்டாலின் அவர்களின் காவல்துறை,உதயநிதி ஸ்டாலினுக்காக கோயம்புத்தூரில் கூட்டப்பட்ட கூட்டத்தைப் பார்த்து கண்களை மூடிக்கொண்டு இருக்கிறதா? என்றும்,திமுகவை ‘தீய சக்தி கூட்டம்’ என்று தெரியாமலா சொன்னார்கள் நம் தலைவர்கள்? என்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக கட்சி சார்பில் கோவை மாவட்ட மாநகராட்சி,நகராட்சி,பேரூராட்சி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று கொடிசியா மைதானத்தில் தமிழக மின்சாரம்,மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில்,திமுக கழக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

இதன் பின் பேசிய உதயநிதி அவர்கள்,”கோவையில் சிறப்பான வரவேற்பை பார்க்க முடிந்தது. கடந்த சட்டமனற்ற தேர்தலின்போது இங்கு 2 நாட்கள் தங்கியிருந்து பணியாற்றியதாகவும் தெரிவித்தார்.

மேலும்,கோவை மக்களுக்கு குசும்பு மட்டும் இல்லை,சில நேரங்களில் ஏமாற்றியும் விடுகிறீர்கள்.சட்டமன்ற தேர்தலில் 10 தொகுதியில், 5 தொகுதியாவது வெற்றி பெறுவோம் என நினைத்தேன்.ஆனால், ஒரு தொகுதி கூட ஜெயிக்கவில்லை, கோவை மக்கள் ஏமாற்றி விட்டீர்கள் என்று கூறினார். நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிப்பெற அனைவரும் பாடுபட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.அதே சமயம்,ஊழல் செய்த அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி சிறை செல்வது உறுதி என்றும் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில்,புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு தினத்தையொட்டி சென்னையில் மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் அமமுகவினர் அஞ்சலி செலுத்துவதற்கு வழங்கியிருந்த அனுமதியை ஒமிக்ரான் மற்றும் கொரோனா பெருந்தொற்று மீண்டும் அதிகரிப்பதை முன்னிட்டு ரத்து செய்வதாக காவல்துறையினர் தெரிவித்திருந்தார்கள்.

இந்நிலையில்,புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் நாங்கள் ஒன்று கூடி அஞ்சலி செலுத்தினால் ஓமிக்ரான் பரவும் என்று தடைபோட்ட ஸ்டாலினின் காவல்துறை,உதயநிதி ஸ்டாலினுக்காக கோயம்புத்தூரில் கூட்டப்பட்ட கூட்டத்தைப் பார்த்து கண்களை மூடிக்கொண்டு இருக்கிறதா? என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக,தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியதாவது:

“புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் நாங்கள் ஒன்று கூடி அஞ்சலி செலுத்தினால் ஓமிக்ரான் பரவும் என்று தடைபோட்ட ஸ்டாலினின் காவல்துறை,உதயநிதி ஸ்டாலினுக்காக கோயம்புத்தூரில் கூட்டப்பட்ட கூட்டத்தைப் பார்த்து கண்களை மூடிக்கொண்டு இருக்கிறதா?.

ஒருவேளை தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியினரின் கூட்டங்களில் மட்டும்தான் ஓமிக்ரான் பரவும் என்று தி.மு.க அரசுக்கு உலகமகா நிபுணர்கள் யாராவது சொல்லி இருப்பார்களோ?.

இவர்களுக்கு மனசாட்சியும் கிடையாது,மக்களைப் பற்றி கவலையும் கிடையாது! ‘தீய சக்தி கூட்டம்’ என்று தெரியாமலா சொன்னார்கள் நம் தலைவர்கள்? “,என்று பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்