திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை பொய்யும், புரட்டும் நிறைந்தது என்று பாஜக மாநில தலைவர் எல் முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் திமுக எம்எல்ஏ சரணவனன் பாஜகவில் இணைந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் எல் முருகன், திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை பொய்யும், புரட்டும் நிறைந்தது, மக்களை ஏமாற்ற கூடியது. ஏற்கனவே இரண்டு ஏக்கர் நிலம் தருவதாக சொல்லிவிட்டு, ஒன்றும் தரவில்லை இப்பொது மக்களை ஏமாற்ற கூடிய அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்தபின் கட்டப்பஞ்சாயத்து, நிலம் அபகரிப்பு ஆகியவை மீண்டும் அதிகரிக்கும் என எல் முருகன் விமர்சனம் செய்துள்ளார். ரூ.1,000 கொடுப்பதாக திமுக கூறினாலும் அதை செய்யமாட்டார்கள், அதிமுக சொன்னால் செய்வார்கள். திமுக அளிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில்லை, அதற்கு மாறாக தங்களை வளர்த்துக்கொள்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
தொகுதியில் உள்ள நிர்வாகிகளிடம் இருந்து சரியான ஒத்துழைப்பு இல்லை என்றும் அங்கீகாரமும், ஜனநாயகமும் கிடைக்கும் இடம் என்பதால் பாஜகவில் இணைந்தேன் எனவும் பாஜகவின் இணைந்த திமுக எம்எல்ஏ சரவணன் தெரிவித்துள்ளார். இதனிடையே, சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் 20 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிடுவதாக கூறப்படுகிறது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…