திமுக தேர்தல் அறிக்கை பொய்யும், புரட்டும் நிறைந்தது – எல் முருகன்

Default Image

திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை பொய்யும், புரட்டும் நிறைந்தது என்று பாஜக மாநில தலைவர் எல் முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை கோயம்பேட்டில் திமுக எம்எல்ஏ சரணவனன் பாஜகவில் இணைந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் எல் முருகன், திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை பொய்யும், புரட்டும் நிறைந்தது, மக்களை ஏமாற்ற கூடியது. ஏற்கனவே இரண்டு ஏக்கர் நிலம் தருவதாக சொல்லிவிட்டு, ஒன்றும் தரவில்லை இப்பொது மக்களை ஏமாற்ற கூடிய அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்தபின் கட்டப்பஞ்சாயத்து, நிலம் அபகரிப்பு ஆகியவை மீண்டும் அதிகரிக்கும் என எல் முருகன் விமர்சனம் செய்துள்ளார். ரூ.1,000 கொடுப்பதாக திமுக கூறினாலும் அதை செய்யமாட்டார்கள், அதிமுக சொன்னால் செய்வார்கள். திமுக அளிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில்லை, அதற்கு மாறாக தங்களை வளர்த்துக்கொள்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

தொகுதியில் உள்ள நிர்வாகிகளிடம் இருந்து சரியான ஒத்துழைப்பு இல்லை என்றும் அங்கீகாரமும், ஜனநாயகமும் கிடைக்கும் இடம் என்பதால் பாஜகவில் இணைந்தேன் எனவும் பாஜகவின் இணைந்த திமுக எம்எல்ஏ சரவணன் தெரிவித்துள்ளார். இதனிடையே, சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் 20 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிடுவதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்