“புதிய பதவி காட்டி கொடுக்காமல் இருக்க”..!சாடிய துரைமுருகன்..!!

Default Image

தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கோவையில் பேட்டியளித்தார் அதில்

குட்கா ஊழலில் தொடர்புடைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் பதவி கொடுக்கப்பட்டு உள்ளது. அது குறித்து உங்கள் கருத்து என்ன?என்று செய்தியாளர்கள் கேட்டனர்.

பதிலளித்த துரைமுருகன் பதவி கொடுக்க வில்லை என்றால் தங்களை காட்டிக்கொடுத்து விடுவார் என்ற பயத்தால்தான் அவருக்கு கட்சியில் இந்த பதவி வழங்கப்பட்டு இருக்கிறது.

Related image

மேலும் தமிழகத்தில் மின்தடை பற்றி பேசிய அவர் தமிழகத்தில் மின்தடையே இருக்காது என்று ஒரு அமைச்சர் சொல்லி உள்ளார். மற்றொரு அமைச்சர் நிலக்கரி பற்றாக்குறையாக இருக்கிறது, அதை கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி இருப்பதாக கூறுகிறார். முதலில் அமைச்சர்கள் அமர்ந்து நாட்டின் மின்சார நிலைமையை பேசி தெளிவாக முடிவெடுத்து பின்னர் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்