உள்ளாட்சி தேர்தலை திமுக விரும்பவில்லை – அமைச்சர் ஜெயக்குமார்

Default Image

உள்ளாட்சித் தேர்தல் நீண்ட வருடங்களாக நடைபெறாமல் உள்ளது.இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.இந்த விசாரணையின் போது டிசம்பர் மாதம் இரண்டாவது வாரம் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உள்ளதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது.ஆனால் தமிழகத்தில் கட்சிகள் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேலைகளை தீவிரமாக செய்து வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு முன்னதாக தொகுதி மறுவரையரை பணிகளை  மேற்கொள்ள மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி வழக்கு  தொடரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று சென்னை பட்டினப்பாக்கத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இது குறித்து கூறுகையில், உள்ளாட்சி தேர்தலை திமுக விரும்பவில்லை என்பது தற்போது உண்மையாகியுள்ளது. யார் தடுத்தாலும் உள்ளாட்சி தேர்தல் நிச்சயம் நடைபெறும் என்று  அமைச்சர் ஜெயக்குமார்  தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்