டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 ஏ, குரூப்-4 ஆகிய தேர்வுகளில் நடந்த முறைகேடுகளை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தனித்தனியாகப் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எனவே குரூப் 4 , குரூப் 2ஏ தேர்வு முறைகேடுகளை சிபிஐ விசாரிக்க வேண்டும் என ஏற்கனவே திமுகக் கோரிக்கை வைத்து உள்ளது.
இந்தக் கோரிக்கையைச் சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகம் முன்பாக திமுக சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக இளைஞரணி மற்றும் மாணவரணியினர் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் டி.என்.பி.எஸ்.சி.நடத்திய குருப்-4 தேர்வில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்த நிலையில் டி.என்.பி.எஸ்.சி.நடத்திய விசாரணையில் 99 பேர் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவர சம்பந்தப்பட்ட 99 தேர்வர்களை தகுதி நீக்கம் செய்து வாழ்நாள் முழுதும் தேர்வு எழுத தடை விதித்தது.
பின்னர் குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் கொடுத்த புகாரின் போரில் சிபிசிஐடி போலீசார் 3 தனிப்படைக்கள் அமைத்து விசாரணை செய்ததில் இடைத்தரகர், தேர்வர்கள் என 16 பேரை கைது செய்து உள்ளனர். மேலும் இதை தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் குரூப்-2 ஏ தேர்விலும் முறைகேடுகள் நடந்திருப்பது இப்போது உறுதி ஆகியுள்ளது.முக்கிய குற்றவாளியாக கருதப்படும் இடைத்தரகர் ஜெயக்குமாரை சிபிசிஐடி போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சத்தீஸ்கர்: பிஜப்பூர் மாவட்டம் கரேகுட்டா வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது நக்சல் தீவிரவாதிகளுக்கும், அவர்களுக்கும்…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீர், அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று, மதியம் 02:50 மணியளவில், 4 முதல்…
பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று, ஜம்மு - காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் பைசரன் புல்வெளியில் நடந்த…
உதம்பூர் : ஜம்மு -காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தேடுதல் வேட்டையைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும்…
பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் புல்வெளியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கர பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு,…